மழை பாதித்த விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாமக சார்பில் புதன்கிழமை தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.








