சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை:சேர்வலாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2015, 10:34 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 83.66 அடியாக இருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீ்ர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை: பாபநாசம் அணையில் 6 மி.மீ, சேர்வலாறு அணை 4 மி.மீ, மணிமுத்தாறு அணை 4.6 மி.மீ, கடனாநதி அணையில் 1 மி.மீ, ராமநதி அணையில் 2 மி.மீ, கருப்பாநதி அணையில் 4.5 மி.மீ, குண்டாறு அணையில் 6 மி.மீ, அடவிநயினார் அணையில் 19 மி.மீ.கன்னடியன் அணைக்கட்டில் 19 மி.மீ, அம்பாசமுத்திரம் 12 மி.மீ, சேரன்மகாதேவியில் 5.4 மி.மீ, தென்காசியில் 4.2 மி.மீ, செங்கோட்டையில் 2.1 மி.மீ, ஆய்க்குடியில் 1.2 மி.மீ, ஆலங்குளம் 1.4 மி.மீ, ராதாபுரம் 6 மி.மீ, நான்குனேரி 1 மி.மீ, சிவகிரியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வந்த வெப்பம் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. கடந்த 2 தினங்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து  அதிகரித்து காணப்படுகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1301.16 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாசனம், குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 1204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 72 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 123.78 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

மணிமுத்தாறு அணையிலிருந்து 375 கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 110 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், அடவிநயினார் அணையில் 25 கனஅடியும், கொடுமுடியாறு அணையில் 50 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.பாபநாசம் அணையின் நீர்மட்டம் 77.40 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 83.66 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80.60 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 54.30 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 61.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 68.63 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 82.25 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 29.50 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.