ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அப்பையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் தசரதபெருமாள் (46). இவருக்கும் இதே இடத்தைச் சேர்ந்த குருநாதன் (65) என்பவருக்கும் தனியார் இடத்தில், பொது இடப் பிரச்னை இருந்து வருகிறது. இது குறித்த புகார்களின் பேரில், வருவாய்த்துறையினர் இப்பாதையில் ஆக்கிரமிப்பு எடுக்க காவல் துறையினர் பாதுகாப்பை கோரி கடிதம் எழுதியிருந்துள்ளார்கள். அக்டோபர் மாதம் 28-ம் தேதி ஆக்கிரமிப்பு எடுக்கப்பட இருப்பதாக தசரதபெருமாளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் மல்லி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் விஷத்துடன் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸார் ஆக்கிரமிப்பை முன் அறிவிப்பு இல்லாமல் எடுக்கமாட்டோம் என்று உறுதியளித்ததையைடுத்து அவர் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.