மாணவ மாணவியருக்கு மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் புத்தாடைகளை வழங்கி நிறுவனத்தின் இயக்குநர் இ.விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மகளிர் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு மக்கள் கல்வி நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி பயிற்சி அளித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் ஏராளமான பெண்கள் சுய தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கி வருவதாய் கூறினார். மேலும் மாணவர்கள் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் சிறந்த குடிமக்களாக திகழ ஒழுக்கம், கட்டுப்பாடு, பெரியோரை மதித்தல் உள்ளிட்ட நற்பண்புகளை சிறு வயதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.