மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிற்பட்டோர், சிறுபான்மையினர் துறைக்கு அடுத்த ஆண்டு கூடுதல் நிதி அமைச்சர் பி.ஆர்.சிவா தகவல்

பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு அடுத்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் பி.ஆர்.சிவா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 நவம்பர் 2015, 8:35 am

சுஜித்குமார்

பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கு அடுத்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் பி.ஆர்.சிவா தெரிவித்துள்ளார்.

பிற்பட்டோர் நலத்துறை சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு வார விழா சாரத்தில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

துறை செயலாளர் பி.ஆர்.பாபு தலைமை தாங்கினார். இயக்குநர் எஸ்.மீனாகுமாரி வரவேற்றார். பிற்பட்டோர் மேம்பாட்டுக்கழகத் தலைவர் வை.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

75 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் சிவா பேசியதாவது:

என்.ஆர். காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வசித்து வருகின்றனர். இதற்கு முதல்வர் ரங்கசாமி ஆட்சியே காரணமாகும்.

பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு அடுத்த ஆண்டு முதல் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இதனால் நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்த முடியும் என்றார் சிவா. உதவி இயக்குநர் சுகந்தி, அருள்தந்தை லாரன்ஸ், ஹாஜியார் முகமது சையத் பாகவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.