எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணப்பாறை அருகே சாலை விபத்தில் சிறுவன் பலி: ஓட்டுநர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் கார் மோதி பள்ளி மாணவன் பலியான விபத்தில் கார் டிரைவரை போலிசார் கைது செய்தனர்.

News image
Updated On :20 நவம்பர் 2015, 12:20 pm

கோபாலகிருஷ்ணன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் கார் மோதி பள்ளி மாணவன் பலியான விபத்தில் கார் டிரைவரை போலிசார் கைது செய்தனர்.

வையம்பட்டி அருகே உள்ள சேசலூரைச் சேர்ந்தவர் விவசாயி சின்னக்காளை இவரது மகன் சந்தோஷ்குமார்(9) இவர் சரளப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகின்றார்.நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற கார் சந்தோஷ்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வையம்பட்டி போலிஸ் எஸ்.ஐ அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சென்னை காந்திரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கார் டிரைவர் கலைஞானம்(30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.