அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென நிர்வாக அலுவலக கட்டடம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென நிர்வாக அலுவலக கட்டடம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாக தமிழக அரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழக அரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு பல்கலைக்கழகத்தே அரசே ஏற்று நடத்தி வருகிறது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நீண்ட வருடங்களாக பணியாற்றி வரும் ஊழியர்கள் சுமார் 250 பேர் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி பல்கலைக்கழக நிர்வாக கட்டடம் முன்பு சாலையில் அமர்ந்து திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திங்கள்கிழமை காலை 10 மணி முதல் போராட்டத்தை தொடர்ந்த அவர்கள் மாலை வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஆதரித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், எஸ்சி., எஸ்டி ஆசிரியர்கள் பணியாளர்கள் நல சங்கத் தலைவர் விஜய் உள்ளிட்டோர் பேசினர். தொகுப்பூதிய ஊழியர்களின் திடீர் போராட்டத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...