எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடைக்கானலில் தொடர் மழையால் மலைச்சாலையில் மரம் விழுந்தது

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையின் காரணமாக மலைச்சாலைகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மரங்கள் விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிப்பு

News image
Updated On :26 செப்டம்பர் 2015, 9:22 am

ஏ. ஆரோக்கியசாமி

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையின் காரணமாக மலைச்சாலைகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மரங்கள் விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது நள்ளிரவில் மரங்களை அகற்றியதால் போக்குவரத்து சீரானது.

கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது இந் நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையான டைகர் சோலை, ஊத்து ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இரவு நேரமாக இருந்ததால் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. இருப்பினும் பேருந்துகளிலும்,தனியார் வாகனங்களில் வந்திருந்தவர்களும் நள்ளிரவில் மலைச் சாலையில் மழையிலும்,குளிரிலும் வாகனங்களிலேயே காத்துக்கிடந்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சென்று விழுந்த கிடந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.