மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதல்வர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்ட கல்யாணசுந்தரம் ஆதரவாளர்கள்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வலியுறுத்தி காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவாளர்கள் இன்று மதியம் முதல்வர் ரங்கசாமி வீட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2016, 9:59 am

சுஜித்குமார்

புதுச்சேரி: தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வலியுறுத்தி காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆதரவாளர்கள் இன்று மதியம் முதல்வர் ரங்கசாமி வீட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு பேரவை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு பி.எம்.கல்யாணசுந்தரம் வெற்றி பெற்றார். கல்வி அமைச்சரான அவர் பின்னர் தேர்வு முறைகேடு தொடர்பாக பதவி இழந்தார்.

மேலும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் நடந்த மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் முதல்வர் ரங்கசாமி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக 5 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதில் கல்யாணசுந்தரம் ஒருவராவார். இதனால் என்.ஆர். காங்கிரசில் போட்டியிட இருந்த கோகுலகிருஷ்ணன், பின்னர் அதிமுகவில் சேர்ந்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி வரும் தேர்தலில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் கட்டப் பட்டியலை வெளியிட்டார். அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். அதில் காலாப்பட்டு தொகுதியும் ஒன்றாகும்.

இதற்கிடையே வியாழக்கிழமை முதல்வர் ரங்கசாமி வீட்டில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. அப்போது கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் நூற்றுக்குக்கும் மேற்பட்டோர் அங்கே குவிந்தனர்.

கல்யாணசுந்தரத்துக்கு ஆதரவாக கோஷமிட்ட அவர்கள் வரும் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் எனக்கோரினர். பின்னர் யாகம் முடிந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி, எந்த நேரத்தில் எது செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.