கடலூர்: கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தமாகா வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரன் மனுத்தாக்கல் செய்தார்.
அதன்பின்னர் 3 மணி வரையில் யாரும் வராத நிலையில், மனுத்தாக்கல் முடிந்தது என்று அலுவலக வாசலில் நின்றுக் கொண்டிருந்த போலீஸார் நினைத்திருந்தனர்.
அப்போது திடீரென ஒருவர் அலுவலகம் உள்ளே நுழைந்தார் தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். நேரம் முடிந்து விட்டதாக போலீஸார் கூறியும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திப்பதாக கூறி உள்ளேச் சென்றார். கோட்டாட்சியரான தேர்தல் நடத்தும் அலுவலர் நா.உமாமகேஸ்வரியை சந்தித்து வேட்புமனுத்தாக்கலுக்கான ஆவணங்களை வழங்கினார். ஆனால் மணி 3.05 ஆகியிருந்ததால் மனுவை வாங்க முடியாதென கோட்டாட்சியர் திருப்பியனுப்பினார்.
இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கப்பியாம்புலியூரைச் சேர்ந்த கு.தங்கராசு(59) என்பது தெரிய வந்தது. சுயேட்சையாக போட்டியிட விரும்பிய இவர், மனுத்தாக்கலுக்கான விண்ணப்பங்களை ஏற்கனவே பெற்றுச் சென்றுள்ளார். விண்ணப்பத்துடன் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதற்கான சான்றினை பெற்று வருவதற்காக மீண்டும் விழுப்புரம் சென்று வர நேரமாகி விட்டதாக கூறினார்.
5 நிமிடத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு தவற விட்ட சோகத்தில் திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

