தமிழ்நாடு
காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகர் சீனிவாசன் வெட்டிக் கொலை
காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகர் சீனிவாசன் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகர் சீனிவாசன் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவர் சீனிவாசன். இவர், இன்று காலை தத்தாத்ரேயர் கோயிலுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த போது மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.