புதுச்சேரி: தேமுதிக மாநில பொறுப்பாளர் ஆதரவாளர்களுடன் விலகி காங்கிரஸில் இணைந்தனர்
கட்சித் தலைமை தங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனக்கூறி புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி விட்டார்.


புதுச்சேரி : கட்சித் தலைமை தங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனக்கூறி புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி விட்டார்.
புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வம் என்ற செல்வராஜ். இவர் கடந்த பல ஆண்டுகளாக கட்சியின் மாநில பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் பொறுப்பாளர் செல்வராஜ் திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்து தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டார். புதுச்சேரி மாநில தேமுதிக நிர்வாகிகளை தலைமை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என புகார் கூறியுள்ளார்.
எனது தலைமையில் 15 தொகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் இணைகிறோம். மாநில தலைவர் நமச்சிவாயம் முன்னிலையில் அதில் இணைகிறோம். வரும் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றிக்காக பாடுபடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...