திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நெற்பயிரைத் தாக்கும் முள் வண்டுகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களை, குறிப்பாக பிபிடி 5204 ரகத்தை முள் வண்டுகள் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி

News image
Updated On :4 அக்டோபர் 2016, 3:18 am

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களை, குறிப்பாக பிபிடி 5204 ரகத்தை முள் வண்டுகள் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
முள் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, உதவிப் பேராசிரியர் மணிமாறன் ஆகியோர் கூறியதாவது:
பொதுவாக, முள் வண்டு புழுக்கள் துளைத்திருப்பதை இலைகளின் மேல் தெளிவாகக் காண முடியும். இலைகளின் மேற்புறத்தில் அவை பச்சையத்தைச் சுரண்டி உண்ணுவதால், நடுநரம்புக்கு இணையாக வெள்ளை நிற வரிகள் காணப்படும்.
இலைத் திசுக்களின் ஊடே புழுக்கள் துளைப்பதால், இலை நரம்புகளுக்கு இணையாக ஒழுங்கற்ற கண்ணாடி போன்ற வெள்ளை நிறத் திட்டுக்கள் தோன்றும்.
புழுக்கள் இலைகளைத் துளைத்து, அவற்றின்  நுனிகளில் கொப்புளங்களை ஏற்படுத்தும். சேதம் ஏற்பட்ட இலைகள் வாடி விழுந்து விடும்.
தீவிரத் தாக்குதலின்போது, நெல் வயல் முழுவதும் எரிந்தது போன்று காட்சி தரும்.
பூச்சியின் விபரம்: பூச்சியின் முட்டை பொதுவாக இலையின் நுனியை நோக்கி, இளம் இலைகளின் சிறு பிளவு வெடிப்புகளுக்குள்  இடப்பட்டிருக்கும்.
புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் தட்டையாகக் காணப்படும். இலைகளைத் துளைத்து இலைத் திசுக்களை உண்டு, அதனுள்ளேயே கூட்டுப் புழுவாக வளரும்.
வண்டுகள் சற்று சதுரமான வடிவத்தில் கருநீலம் (அ) கருப்பு நிறத்தில் உடல் முழுவதும் முட்களுடன் காணப்படும்.
பூச்சிக்கொல்லிகள்: ஹெக்டேர் ஒன்றுக்கு கார்போபியுரான் 15 கிலோ (அ) குளோரோ பைரிபாஸ் 1.25 லிட்டர் (அ)  ட்ரைஅசோபாஸ் 1.25 லிட்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிப்பதன் மூலம் முள் வண்டு மேலாண்மையை கடைபிடிக்கலாம்.
மேலும், நெல் வயல்களில் பாசி அதிக அளவில் இருந்தால், பயிர் வளர்ச்சி மிகவும் குன்றி காணப்படும்.
பாசியைக் கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 1 கிலோ வீதம் இடலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.