/
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் தனது கையின் கட்டை விரல் நகத்தால் 9.98 கிலோ எடையை 55 வினாடிகளில் தூக்கிப்பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் ஏ. பிரதாப்(21). கீரனூர் அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது கட்டை விரல் நகத்தால் இரும்புக் கம்பிகளைத் தூக்கி உலக (கின்னஸ்) சாதனை செய்யும் நோக்கில், அதற்காக பயிற்சிகளையும் எடுத்து வந்தார். இந்நிலையில், கடந்த பிப்.11 -ல் தனது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 9.58 கிலோ எடையை 1 நிமிடம் 30 வினாடிகள் தூக்கி நிறுத்தி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து, புதுகையில் ஞாயிற்றுக்கிழமை ரோட்டரி சங்க விழாவில் கின்னஸ் புத்தக நிறுவன பார்வையாளருமாக டிராகன் ஜெட்லி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், பங்கேற்ற மாணவர் அ. பிரதாப், இதுவரை உலக(கின்னஸ்) சாதனையாக இருந்து வந்த 8.66 கிலோ எடையை விஞ்சும் வகையில், தனது கட்டை விரல் நகத்தால் 9.98 கிலோ இரும்புக்கம்பியை 55 வினாடிகளில் தூக்கி நிறுத்தினார். இதன் மூலம் முந்தைய கின்னஸ் உலக சாதனையாக இருந்த 8.66 கிலோ எடையை 28 வினாடிகள் தூக்கிய ஆந்திராவைச் டிக்காபானுபிரகாஷின் சாதனையை முறியடித்து தற்போது உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவது, அதற்கான சான்றிதழ் வந்தவுடன் உறுதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர் பிரதாப்பை ரோட்டரி தன்னார்வ நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் ரஷியா - உக்ரைன் போர்; டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி !

மாணவர்களின் போராட்டம் மத்திய அரசைப் பணிய வைத்தது! அகிலேஷ் யாதவ்

ஏசி பெட்டியில் ஊதுபத்தி, விளக்கேற்றி பூஜை.. பயணி கண்டுபிடிக்கப்படுவாரா?

ஆகஸ்ட்டில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


