தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது பற்றி இன்று வெளியாகியுள்ள அறிகை விபரம் வருமாறு:
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 8.3 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை வழங்கப்படும்.
இதன் மூலம் அரசுக்கு 476.71 கோடி ருபாய் செலவாகும். அரசின் இந்த அறிவிப்பால் 3,67,777 ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
அனைத்து சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும்.
மேலும் அரசு ஊழியர்களுக்கான சம்பள உச்ச வரம்பை தளர்த்தியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.