மூன்று தொகுதி வெற்றியின் மூலம் மக்கள் தனது பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தனது பணிகள் எப்போதும் சிறப்புடன் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தொகுதி தேர்தல் வெற்றி குறித்து, முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கியிருக்கும் வாக்காளர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகிழ்ச்சி, உற்சாகம்: மருத்துவமனையில் உடல் நலம் தேறி வரும் எனக்கு நீங்கள் வழங்கியிருக்கும் இந்தத் தேர்தல் வெற்றி எல்லையில்லாத மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. எனது தலைமையிலான ஆட்சியின் சாதனைகளையும், நலத் திட்டங்களையும், தொலைநோக்குத் திட்டங்களையும் சீர்தூக்கிப் பார்த்து அதிமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து எனக்கு தொடர் வெற்றியை அளித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப எனது பணிகள் எப்போதும் போன்று சிறப்புடன் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பை ஒரு போதும் மறவேன்: நான் விரைவில் பூரண நலம்பெற வேண்டி அதிமுகவினரும், தமிழக மக்களும், என் மீது பேரன்பு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறீர்கள். பலர் மருத்துவமனைக்கே நேரில் வந்து நலம் விசாரித்துச் செல்கிறீர்கள் என்பதை நன்கு அறிவேன்.
உங்களுடைய பரிவுக்கு நன்றி. உங்களது பேரன்பை நான் ஒரு போதும் மறவேன். எனது அன்புக் கட்டளையை ஏற்று மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிய கட்சியினர், தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற பிரியா காங்கஸ் - புகைப்படங்கள்

சர்ச்சைக்குரிய ஆன்மிகப் பேச்சாளரைக் கரம் பிடிக்கும் நடிகை மிருணாளினி!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 1 - நேரலை!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 4ஆவது தங்கம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



