கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரையில் இடி, மின்னலோடு ஏமாற்றிய மழை

மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கருமேகம் திரண்ட நிலையில் இடிமின்னலுடன் தூரலே காணப்பட்டது. இதனால் மக்கள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:21 pm

DIN

மதுரை: மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கருமேகம் திரண்ட நிலையில் இடிமின்னலுடன் தூரலே காணப்பட்டது. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
 மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக 106 டிகிரி அளவுக்கு வெப்பத்தாக்கம் உள்ளது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
 இன்று பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் திடீரென வானம் கருமேகத்துடன் காணப்பட்டது. பின்னர் காற்றுடன், இடி மின்னலுடன் மழை பெய்தது.
 சிறிது நேரம் பெய்த மழையும் தூரலாகவே காணப்பட்டது. இதனால் வெப்பத்தாக்கம் குறையவில்லை. காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
 மதுரை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி பங்களா பகுதியில் 9.2 மில்லிமீட்டரும், மேட்டுப்பட்டியில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவானதாக பொதுப்பணித்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.