அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்றுவது சட்ட ரீதியில் தவறானது: மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்றுவது சட்ட ரீதியில் தவறானது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2017, 9:01 pm

DIN

ஜெயலலிதா வீட்டை நினைவில்லமாக மாற்றுவது சட்ட ரீதியில் தவறானது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்றுவதை சட்டப்படி செய்ய வேண்டும். இப்போது நடைபெறுவது சட்ட ரீதியாகத் தவறானது. எனவே, இதில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்றுதான் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இதை எதிர்த்துப் போராடாமல் தமிழக அரசே ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அதிமுகவில் இப்போது நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும், கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என எல்லாமே தில்லியில் நடக்கிறது. அதற்கேற்றாற்போல இங்கு செயல்படுகிறார்கள்.
ஜெயலலிதா எப்போது மரணமடைந்தாரோ அன்று முதலே திமுக மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் அவருடைய மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறிவந்தனர். குறிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இதுபோல, ஓ.பன்னீர்செல்வமும் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், இப்போது தமிழக அளவிலான விசாரணைக்கு அவர் ஒப்புக்கொண்டிருப்பதில் சந்தேகம் ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.