அரசு கேபிள் தொலைக்காட்சி சார்பில் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் புதிய திட்டம் வெள்ளிக்கிழமை (செப்.1) தொடங்கி வைக்கப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தப் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள், அரசு கேபிள் தொலைக்காட்சி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளன.