கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த காலநிலை நிலவும்

தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு குளிர்ந்த காலநிலை காணப்படும் என வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு குளிர்ந்த காலநிலை காணப்படும் என வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: வடக்கில் இருந்து ஈரப்பதமில்லாத வறண்ட, குளிர்ந்த நிலக்காற்று வீசுகிறது. 
இதன் காரணமாக, தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு குளிர்ந்த காலநிலை காணப்படும். உள்மாவட்டங்களில் மலையோரப் பகுதிகளில் உறைபனி இருக்கும். 
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் மலையோரப் பகுதியில் உறைபனி காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com