அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

முதல்வர் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்டதாக வழக்கு: இளைஞருக்கு முன்ஜாமீன்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக புகைப்படம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் உசிலம்பட்டி இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:17 pm

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக புகைப்படம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் உசிலம்பட்டி இளைஞருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஒக்கி புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் வந்தார். அப்போது பிரதமரை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தார். இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. அதில் தமிழக முதல்வரின் சட்டைப் பையில் பிரதமரின் படம் இருப்பதைப் போல 'மார்பிங்' செய்த புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
முதல்வர் மீது அவதூறு பரப்பும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட படம் வெளியிடப்பட்டதாகக் கூறி கன்னியாகுமரி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அலெக்ஸ்பாண்டியன், லட்சுமண மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விஜய் (24) என்பவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.