திமுக ஆட்சி காலத்தில்தான், எரிவாயு கடன் ஊழல், கொப்பரை கொள்முதல் ஊழல், மற்றும் தகுதியற்றவர்களுக்கு விவசாய கடன் வழங்குதல், போலி கடன்கள் வழங்குதல், வருவாய்க்கு மீறிய செலவினம், முறையற்ற பணி நியமனம், போன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகள், நசிந்து, சிதைந்தது. குறிப்பாக, கொப்பரை கொள்முதலில் ரூ.363.90 கோடியும், எரிவாயு கடன் வழங்கியதில் ரூ.84.34 கோடியும் என மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று, கூட்டுறவு அமைப்புகள் சீரழிந்தது முன்னாள் திமுக ஆட்சியில்தான். அதுவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தான் என்பதை ஸ்டாலிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.