இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருச்செந்தூரில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்திய 15 பேர் கைது! 

மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத் தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சு விரட்டு நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :15 ஜனவரி 2017, 7:26 am

DIN

திருச்செந்தூர்: மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு உச்ச நீதிமன்றத் தடையை மீறி திருச்செந்தூரில் மஞ்சு விரட்டு நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் தினமான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை விளாங்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் அந்தந்தப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், திருச்செந்தூர் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் தடையை மீறி இன்று காலை மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதற்காக வாடிவாசல் போல தற்காலிகமான இடமொன்று அமைக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர். இதனையடுத்து தடையை மீறி ஜல்லிக்கட்டுநடத்திய குற்றத்திற்காக 15 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போல திருச்சி, கல்லணை அருகே உத்தமசீலி கிராமத்தில் 50 மாடுகளை இளைஞர்கள் காளைகளுக்கு பூஜை போட்டு மாடுகளை இளைஞர்கள் அவிழ்த்து விட்டு ஜல்லிக்கட்டு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.