எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பருவம் தவறி பெய்யும் மழை: நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

வடகிழக்குப் பருவ காலம் முடிவடைந்த பிறகு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

News image
Updated On :28 ஜனவரி 2017, 11:34 am

ஷேக் அப்துல்காதர்


திருநெல்வேலி: வடகிழக்குப் பருவ காலம் முடிவடைந்த பிறகு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

வடகிழக்குப் பருவ மழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்வது வழக்கம். 2016 இல் பருவ மழை தாமதமாக அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கிய போதிலும் தொடர்ந்து பெய்யவில்லை.

வழக்கமான மழை அளவை விட 62 சதவீதம் குறைவாக பெய்ததால் தாமிரவருணிப் பாசனத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான நீர்இருப்பும் அணைகளில் இல்லை.

இதனிடையே சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும், இவ்விரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவ காலம் முடிவடைந்த நிலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-11, பாபநாசம் கீழ் அணை-5, சேர்வலாறு அணை-4, மணிமுத்தாறு அணை-1.4, கடனாநதி அணை-2, ராமநதி அணை-5, கருப்பாநதி அணை-15, கன்னடியன் அணைக்கட்டு-3.8.

பிற பகுதியில்...அம்பாசமுத்திரம்-7.4, சேரன்மகாதேவி-4, சங்கரன்கோவில்-2, சிவகிரி-25, ராதாபுரம்-2.2, நான்குனேரி-4, பாளையங்கோட்டை-12, தூத்துக்குடி-9.6, திருச்செந்தூர்-9, கயத்தாறு-4.8, கோவில்பட்டி-2, குலசேகரப்பட்டனம்-13, விளாத்திகுளம்-17.5, வைப்பாறு-24, மணியாச்சி-1, ஓட்டப்பிடாரம்-6, கீழரசடி-2, சாத்தான்குளம்-11, ஸ்ரீவைகுண்டம்-9.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் 5 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையின் நீர்வரத்து 788 கன அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், பாபநாசம் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 977.32 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 53 கனஅடி, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு அணைகளுக்கு தலா 10 கனஅடியாக  நீர்வரத்து இருந்தது.

அதிகரிக்கும் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 39 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 68.60 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 39.90 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 54 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 37.50 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 45.01 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 21.62 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 64.75 அடி, வடக்குப்பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.21 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 13.25 அடியாகவும் உள்ளது.

நீடிக்கும் மழை: பாபநாசம் அணையில் இருந்து 204.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சனிக்கிழமை கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், விக்கிரமசிங்கபுரம், முக்கூடல் உள்பட இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.