மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸிகா உள்பட அனைத்து காய்ச்சல்களும் கண்காணிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஸிகா வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்து வகையான காய்ச்சல்களையும் தமிழக அரசு கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

News image
Updated On :11 ஜூலை 2017, 7:34 pm

DIN

ஸிகா வைரஸ் காய்ச்சல் உள்பட அனைத்து வகையான காய்ச்சல்களையும் தமிழக அரசு கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை திமுக, அதிமுக உறுப்பினர்கள் எழுப்பினர். தளி தொகுதியில் ஸிகா வைரஸ் காய்ச்சல் குறித்து அந்தத் தொஹகுதி எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ், கேரள மாநில எல்லையோர தமிழக மாவட்டங்களில் பரவி வரும் காய்ச்சல்கள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அளித்த பதில்: பன்றிக்காய்ச்சல், ஸிகா வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சல்களையும் தமிழக சுகாதாரத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தளி தொகுதி அஞ்சட்டியில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதன் மூலம் அங்கு ஒருவருக்கு ஸிகா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
பிற காய்ச்சல்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் அவை உறுதி செய்யப்படவில்லை. ஸிகா காய்ச்சலுக்கான மாதிரிகள் புனேவில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் ஸிகா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சை அளித்ததால் குணப்படுத்தப்பட்டுள்ளார்.
பரிசோதனைக் கருவிகள் தயார்: சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வுக் கூடத்திலும் காய்ச்சல் பரிசோதனைகளுக்கான கருவிகள் தயார் நிலையில் உள்ளன. ஸிகா காய்ச்சலால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. சுகாதாரத் துறையின் சார்பில் கூடுதல் இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோரைக் கொண்டு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சித் துறை உள்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து பலதரப்பையும் இணைத்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே, ஸிகா வைரஸ் காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.