மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூம் போட்டு யோசிப்பாங்களோ: நூதன முறையில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றிய ஊழியர்கள்

விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை திருடிவிட்டு, அதில் வெறும் உப்புப் பாக்கெட், செங்கல் போன்றவற்றை வைத்து ஏமாற்றிய இரண்டு ஃபிளிப்கார்ட் ஊழியர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.

News image
Updated On :17 ஜூன் 2017, 5:28 am

DIN


சென்னை: விலையுயர்ந்த ஸ்மார்ட் போன்களை திருடிவிட்டு, அதில் வெறும் உப்புப் பாக்கெட், செங்கல் போன்றவற்றை வைத்து ஏமாற்றிய இரண்டு ஃபிளிப்கார்ட் ஊழியர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.

இணையதளத்தில் பெரிய அளவில் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது ஃபிளிப்கார்ட் நிறுவனம். பெங்களூருவில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் சென்னை கிளை சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஃபிளிப்கார்ட் டெலிவரி ஊழியர்கள் ஜெய்கணேஷ், சாம் திவாகர், போலியான பெயர்களில் ஃபிளிப்கார்டில் விலை உயர்ந்த செல்போன்களை ஆர்டர் செய்துள்ளனர்.

அந்த செல்போன்கள் அலுவலகத்துக்கு வந்ததும், அதனை டெலிவரி செய்ய எடுத்துச் சென்று, அதனை பிரித்து அதில் இருந்த செல்போனை எடுத்துவிட்டு அதில் கல் உப்பு, செங்கல், பழைய செல்போன்கள் என ஏதேனும் ஒன்றை வைத்து, பிரிக்கப்படாதது போலவே மீண்டும் பேக் செய்துவிடுவார்கள்.

பின்னர், சம்பந்தப்பட்ட முகவரியில் ஆட்கள் இல்லை, வாடிக்கையாளர் செல்போனை வாங்க மறுத்துவிட்டார், முகவரி தவறாக உள்ளது என்று பல காரணங்களை சொல்லி ஃபிளிப்கார்ட் நிறுவனத்திடம் பார்சல்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.

இவ்வாறு திருடும் செல்போன்களை வேறு நபர்களுக்கு விற்றுவிடுவார்கள். இதுபோல சுமார் 6 செல்போன்களை அவர்கள் திருடியிருப்பதும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நிறுவனத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் மீது ஃபிளிப்கார்ட் நிறுவனம் புகார் அளித்ததை அறிந்த, இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.