சென்னை: தண்டையார்பேட்டையில் விரைவில் புதிய ரயில் முனையம் உருவாக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி சென்னையில் தெரிவித்துள்ளார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
சென்னை தண்டையார்பேட்டையில் விரைவில் புதிய ரயில் முனையம் ஒன்று உருவாக்கப்படும். போதிய இடவசதி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முன்பே திட்டமிட்டபடி ராயபுரத்தில் ரயில் முனையம் அமைப்பது சாத்தியம் இல்லை. தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனைய பணிகள் விரைவில் துவங்கப்படும்.
தாம்பரத்தைப் பொறுத்த அளவில் ரயில் முனையம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்று விட்டன. ரயில்வே துறையின் அனுமதி கிடைத்தவுடன் முனையம் செயல்படத் துவங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.