பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின்(85) மறைவு குறித்து தனது இணையதளத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
எழுத்தாள் ஜெயமோகன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில், ’நவீனத் தமிழின் மேதைகளில் ஒருவர் இன்று மறைந்தார். அஞ்சலி என்பதற்கு அப்பால் சொல் ஒன்றுமில்லை’ என்று கூறியுள்ளார்.
மேலும், அசோகமித்திரன் பற்றிய கட்டுரைகள் பலவற்றின் இணைப்பையும் கொடுத்துள்ளார்.
மறைந்த அசோகமித்திரனின் உடல் அவரது மகன் தி.ராமகிருஷ்ணனின் சென்னை வேளச்சேரி இல்லத்தில் (எஸ் 5, பாபாஸ் கார்டன், சாஸ்திரி தெரு (பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவலகம் அருகில்) வேளச்சேரி-தொ.பே. எண் 044-22431698) பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 24) பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.