கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அந்தரத்தில் தொங்கிய வேன்: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!(வீடியோ இணைப்பு)

ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நிலை தடுமாறி ஓடிய சுற்றுலா வேன் ஒன்று பாம்பன் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது.

News image
Updated On :7 மே 2017, 9:25 am

DIN

ராமேசுவரம்: ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நிலை தடுமாறி ஓடிய சுற்றுலா வேன் ஒன்று பாம்பன் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்த பயணிகள் உயிர் தப்பியா சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், கல்லூரணியை சேர்ந்த 12 பேர் வேன் ஒன்றில் இன்று அதிகாலை சுற்றுலாவாக ராமேசுவரம் நோக்கி புறப்பட்டனர். வேனை ஓட்டுநர் அழகேசுவரன் (வயது 32) என்பவர் இயக்கியிருக்கிறார். அதிகாலை 5.30 மணியளவில் வேன் பாம்பன் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. அப்போது மழை தூறியது. இதனால் டிரைவர் வேனை மெதுவாக ஓட்டினார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நிலை தடுமாறி ஓடிய வேன் பாலத்தின் இடதுபுறத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. மோதியய வேகத்தில் அப்படியே வலதுபுறம் நோக்கி பாய்ந்து, பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்தது. வேனின் முன் பக்க சக்கரங்கள் பாலத்தின் வெளியே தொங்கியபடி நின்றது.

தகவல் கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை போலீசார் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். வேனில் இருந்த 12 சுற்றுலா பயணிகளும் உயிர் தப்பினர்.இன்னும் ஒரு அடி வேன் முன்னேறிச் சென்றிருந்தாலும் கடலுக்குள் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.  விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.