தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செவிலியர் போராட்டம்: ஊதிய உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.