வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளும் நடிகர் மயில்சாமி! மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்!

மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். மக்களின் உயிரிழப்பு எனக்கு வருத்தத்தை ...

News image
Updated On :9 அக்டோபர் 2017, 9:20 am

எழில்

மக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளார் நடிகர் மயில்சாமி. 

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருவதுடன், டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 700 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதையடுத்து டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் வீதி வீதியாகத் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளார் நடிகர் மயில்சாமி. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்தார். சாலையில் நின்றுகொண்டு மைக் மூலமாக மக்களிடையே டெங்கு குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இந்தச் செய்தியும் இதன் புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் பரவியது. இதனால் பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார் மயில்சாமி. 

விழிப்புணர்வுப் பிரசாரம் குறித்து மயில்சாமி பேட்டியளித்ததாவது: டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததே இந்நிலைக்குக் காரணம். மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ள வேண்டும். மக்களின் உயிரிழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. நாளுக்கு நாள் டெங்குவினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றன. மக்களும் மற்றவர்களுக்கு நிலவேம்பு கொடுத்து டெங்குவைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.