அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அக்.24 -இல் அடுத்தக்கட்ட நடவடிக்கை: ஜாக்டோ - ஜியோ

வரும் 23 -ஆம் தேதி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்து உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட முடிவை அறிவிக்கும் என்றார் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் க. மீனாட்சிசுந்தரம்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:05 pm

DIN

வரும் 23 -ஆம் தேதி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்து உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட முடிவை அறிவிக்கும் என்றார் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் க. மீனாட்சிசுந்தரம்.
புதுக்கோட்டை அரசு பொது வளாகத்தில் தமிழக அரசின் ஊதிய மாற்றமும், ஏமாற்றமும் என்ற தலைப்பில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் விளக்கக்கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸார் அனுமதி மறுத்ததால், அரசு பொது வளாகத்திற்கு வெளியே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. நாகராஜன் தலைமையில் விளக்கக் கூட்டம் நடத்தினர்.
இதில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலருமான க. மீனாட்சிசுந்தரம் அளித்த பேட்டி: 
தமிழக அரசு தொடர்ந்து தங்களை வஞ்சித்து வருவதால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பாதிக்கபட்டுள்ளனர். நீதிமன்ற வேண்டுகளுக்கிணங்கவே கடந்த முறை போராட்டத்தைக் கைவிட்டோம். 7 ஆவது ஊதியக்குழுவில் எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. வரும் 23 -ஆம் தேதி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்து 24 -ஆம் தேதி சென்னையில் உயர்மட்டக்குழு கூட்டம் கூடி அடுத்தகட்ட முடிவை அறிவிக்கும். நீதீமன்ற தீர்ப்பு சாதகமாக அமையாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டம் மிகவும் கடுமையாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.