அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அனிதா தற்கொலை : பாதுகாப்பு வளையத்தில் மெரினா?

தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்காக மாணவர்கள் பெரும் திரளாக குவிந்து போராட்டம் நடத்தக் கூடும் என்று உத்தேசித்து, சென்னை மெரினா கடற்கரை காவல்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ்... 

News image
Updated On :1 செப்டம்பர் 2017, 2:43 pm

DIN

சென்னை: தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்காக மாணவர்கள் பெரும் திரளாக குவிந்து போராட்டம் நடத்தக் கூடும் என்று உத்தேசித்து, சென்னை மெரினா கடற்கரை காவல்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து போராடிய அரியலூர் மாணவி அனிதா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது தமிழகத்தையே சோகத்தில் மூழ்க செய்து உள்ளது.  உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் திரண்டனர்.

சென்னை அண்ணா சாலையிலும் மாணவர்கள் திரண்டு சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சார்பில் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மெரினாவில் மாணவர்கள் அதிக அளவில் கூடி போராட்டத்தில் ஈடுபடலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை காவல்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.