அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்போம்: திவாகரன்

நீட் விவகாரத்தில் திமுக சார்பில் கூட்டப்படும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக தினகரன் அணி சார்பில் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.

News image
Updated On :3 செப்டம்பர் 2017, 11:35 pm

DIN

நீட் விவகாரத்தில் திமுக சார்பில் கூட்டப்படும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக தினகரன் அணி சார்பில் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
நீட் தேர்வு முறையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீட் தேர்விலிருந்து இந்த ஆண்டில் விலக்கு கிடைத்து விடும் என்று மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். நீட் விவகாரத்தில் திமுக சார்பில் கூட்டப்படும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக தினகரன் அணி சார்பில் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
எங்கள் அணிக்கு 60 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 8 அமைச்சர்கள் இரண்டு அணியும் ஒன்று சேருவதற்காக பேச்சு நடத்தி வருகின்றனர். 32 மாவட்டங்களுமே எங்கள் அணியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என்பதல்ல. 5 முறைக்கும் மேலாக உறுப்பினராக இருந்து வரும் பேரவைத்தலைவர் தனபால் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரவேண்டும். இதன் மூலம், தாழ்த்தப்பட்டவர் முதல்வராகும் கனவு நிறைவேறும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.