தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெரா வழக்கில் தினகரன் மனு: உச்ச நீதிமன்றத்தின் ஆச்சரியமும் எச்சரிக்கையும்

அந்நிய செலாவணி வழக்கில் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2017, 8:00 am

DIN

புது தில்லி: அந்நிய செலாவணி வழக்கில் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையினரால், இரண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதில், பெரா வழக்கு உட்பட 2 வழக்குகளும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் பெரா வழக்கை துரிதமாக விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுவாக ஒரு வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரித்தான் மனு தாக்கல் செய்யப்படும். முதல் முறையாக விரைவாக விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்நிய செலாவணி மோசடி வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்யவேண்டாம் என்று கூறியதோடு, இதுபோன்ற மனுவை இனி தாக்கல் செய்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

அதோடு, இந்த மனுவை நீங்களே திரும்பப் பெறுகிறீர்களா அல்லது அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்யட்டுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உடனடியாக மனுவை திரும்பப் பெறுவதாக தினகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியதை அடுத்து மனு திரும்பப்பெறப்பட்டது.

தினகரன் மீதான இந்த அந்நியச் செலாவணி வழக்கு மீது கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.