அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெரும்பான்மையை இழந்த அரசு உரிமைக் குழுவை கூட்ட முடியாது

பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, உரிமைக் குழுவை கூட்டி விவாதிக்க முடியாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

News image
Updated On :5 செப்டம்பர் 2017, 8:08 pm

DIN

பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, உரிமைக் குழுவை கூட்டி விவாதிக்க முடியாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: பெரும்பான்மையை இழந்திருக்கக்கூடிய நிலையில் உள்ள தற்போதைய ஆட்சிக்கு உரிமைக் குழுவை கூட்டி விவாதிக்கும் எந்தத் தகுதியும் இல்லை. 
எனினும், எங்களுடைய கடமைகளை நாங்கள் முறையாகச் செய்ய வேண்டுமென்று, 21 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்த சட்டப்பேரவைச் செயலர் பொறுப்பில் இருப்பவரிடம் ஒரு கடிதம் கொடுத்துள்ளோம். அதில், அவர்களின் முறையீடு உரிமைப் பிரச்னைக்கு உரிய வகையில் இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளோம். 
ஆனாலும், எங்களுடைய சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி, பல செய்திகளைச் சேகரித்து, உரிய பதிலை முறையாகத் தர வேண்டுமென்றால், 15 நாள்கள் அவகாசம் வேண்டும் என்றும் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தைக் கொடுத்துள்ளோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 109 பேருடைய ஆதரவு மட்டுமே இருப்பதால் அவரால் ஆட்சியை நடத்த முடியாது. ஏற்கனவே, டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 19 பேர்ஆளுநரைச் நேரில் சந்தித்து, இந்த ஆட்சியின் மீதும், குறிப்பாக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி மீதும் நம்பிக்கையில்லை என்று தனித் தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். 
எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் 109 பேர் தான் கலந்து கொண்டதாக செய்திகள் வருகின்றன. 
எனவே, உடனடியாக, ஜனநாயக அடிப்படையில், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
இல்லையென்றால் குதிரை பேரம் இன்னும் பெரிய அளவில் நடைபெறும். இதன் பிறகும் ஆளுநர் உத்தரவிடவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.