அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் ஜனநாயகப் படுகொலை: துரை முருகன் கருத்து

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என திமுக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகன் கூறியுள்ளார்.

News image
Updated On :18 செப்டம்பர் 2017, 7:20 am

DIN


சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என திமுக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகன் கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்துக் கூறிய துரை முருகன், அவைத் தலைவர் தனபால், நீதி தவற மாட்டார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரே இன்று இவ்வளவுப் பெரிய படுகொலையை ஜனநாயகப் படுகொலையை செய்துள்ளார்.

அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை சரிந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜனநாயகத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டுள்ளார். 

பழனிசாமியைக்  காப்பாற்ற வேண்டும் என்று தான் சபாநாயகர் இந்தப் படுகொலையை செய்துள்ளார். 18 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் மெஜாரிட்டியை நிரூபிக்கிறேன் என்று சொன்னால் அது கட்சிக்கு மட்டும் அல்ல ஜனநாயகத்துக்கும் புறம்பான செயல் என்று கருத்துக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.