சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின்போது அடையாள அட்டையை அணிய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா ஐஏஎஸ் பிறப்பித்திருக்கும் உத்தரவில், அரசு ஊழியர்கள், அலுவலகத்தில் பணியின்போது தங்களுக்கான அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டியது அவசியம்.
பணியாளர்/ஊழியர் பெயர், அவர் வகிக்கும் பதவி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் என ஒன்றன் கீழ் ஒன்றாக இடம்பெற வேண்டும். இதற்கேற்றார் போல அடையாள அட்டையில் மாற்றம் செய்து வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.