அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான்

தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான், எனவேதான் இந்த ஆட்சி முற்றுப்பெறாமல் உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான்.

News image
Updated On :20 செப்டம்பர் 2017, 8:11 pm

DIN

தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான், எனவேதான் இந்த ஆட்சி முற்றுப்பெறாமல் உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான்.
திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை பெற்றுத்தர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்தியில் ஆண்டு வரும் பா.ஜ.க. மேலாண்மை வாரியத்தை அமைக்காது காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் நடந்து வருகின்றது. எனவேதான் எப்போதோ முற்றுப்பெற்றிருக்க வேண்டிய ஆட்சி இன்னும் தொடர்கிறது. 
மக்கள் சேவை செய்யாத சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யலாம். ஆனால் தமிழகத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்படியானால் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோதே உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.