தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க. ஆட்சிதான், எனவேதான் இந்த ஆட்சி முற்றுப்பெறாமல் உள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான்.
திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை பெற்றுத்தர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் மத்தியில் ஆண்டு வரும் பா.ஜ.க. மேலாண்மை வாரியத்தை அமைக்காது காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிதான் நடந்து வருகின்றது. எனவேதான் எப்போதோ முற்றுப்பெற்றிருக்க வேண்டிய ஆட்சி இன்னும் தொடர்கிறது.
மக்கள் சேவை செய்யாத சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யலாம். ஆனால் தமிழகத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி 18 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்படியானால் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோதே உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்திருக்கலாமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை? என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நான்குனேரி இரட்டைக் கொலையில் 7 போ் கைது

அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கைது

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போா்ட்: இலங்கை பெண் கைது

காா் ஏற்றி அரசு ஊழியா் கொல்லப்பட்ட வழக்கு: கைதான மூவரையும் குண்டா் சட்டத்தில் அடைக்க ஆட்சியா் உத்தரவு
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

