உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு நிறைவடைந்த பின்னரே முதுநிலை மருத்துவப் படிப்பில் தமிழக இடங்களுக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறினார்.
2018-19 -ஆம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் மார்ச் 17 -ஆம் தேதி தொடங்கின. 9,848 பேர் இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தகுதிப் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அகில இந்திய இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வும் நிறைவடைந்துவிட்ட நிலையில், தமிழக இடங்களுக்கான தகுதிப்பட்டியலை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக டாக்டர் ஜி.செல்வராஜ் கூறும்போது, 'அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு நிறைவடைந்து தீர்ப்பு வெளியானால்தான், அதன் அடிப்படையில் தகுதிப் பட்டியலை தயார் செய்து வெளியிட முடியும்.
உள்ள வழக்கில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் அடுத்த நாளே தகுதிப் பட்டியலை வெளியிட இயலும் என்றார்' அவர்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விவரக் குறிப்பேட்டில் தகுதிப் பட்டியல் ஏப்ரல் 9 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







