இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க சென்னை, கோவை, மதுரை, திருச்சியை மையமாகக் கொண்டு 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியர்கள், இணைப் பதிவாளர்கள் அடங்கிய குழுக்களை ஒரு வார காலத்துக்குள் தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுக்கள் 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி, கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.