கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பழனியில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On :26 டிசம்பர் 2018, 2:37 am IST


பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
பழனி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்ற அவர், சுவாமி தரிசனம் செய்த பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இரவு பூஜையை காண உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி வந்தார். ரோப் கார் மூலம் மலைக்கோயில் வந்த அவரை கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் வரவேற்று, சுவாமி தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். பின்னர், சாயரட்சையில் சுவாமி தரிசனம் செய்த நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பிரசாதங்கள் 
வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.