கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஆண்டாள் விவகாரத்தில் முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப் பதியலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு! 

ஆண்டாள் விவகாரத்தில் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதற்கு   முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published On :

சென்னை: ஆண்டாள் விவகாரத்தில் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதற்கு   முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

இப்பிரச்சினையில் சென்னையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில்  வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  இயக்குநர் பாராதிராஜா பேசியிருந்தார். அவர் தனது பேச்சில் "விநாயகரை இறக்குமதி செய்த கடவுள் என்றும், கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தால் நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டோம்; வைரமுத்துவுக்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால், அதற்காக தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்" என்றும் பேசினார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில், அதன் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் இத்தனை நாட்களுக்குப் பிறகும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே வைரமுத்து மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, வி.ஜி.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.

அந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆண்டாள் விவகாரத்தில் சமூகத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதற்கு   முகாந்திரம் இருந்தால், அவர் மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, இந்த வழக்கினை முடித்து வைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.