திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று கடையடைப்புப் போராட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்புப் போராட்டம், திங்கள்கிழமை (ஜூலை 9) திட்டமிட்டபடி நடைபெறும் என

News image
Updated On :9 ஜூலை 2018, 3:23 am

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்புப் போராட்டம், திங்கள்கிழமை (ஜூலை 9) திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை நிர்வாகத்தின் கீழ், 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2 ஆயிரம் கடைகள் இயங்குகின்றன. இதன் கீழ் இயங்கும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவுத் துறை மூலம் இயங்கும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் இணையான ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஊதியம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்துப் போராடி வருகிறோம். ஆனால், தமிழக அரசு இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. 
கல்வித் தகுதி அடிப்படையிலும், பணிக் காலத்தைக் கணக்கிட்டும் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும். மேலும், நியாய விலைக் கடை பணியாளர்கள் 90 சதவீதம் பேருக்கு ஓய்வூதியம் கிடையாது. மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு பிடித்தம் செய்யப்படும் இபிஎஃப் தொகையை அரசு செலுத்தாததால், அவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. 
பொது விநியோகத் திட்டத்தில் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, நுகர்பொருள் துறை, தொழிலாளர் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் நிர்வாகத்தில் பங்கேற்பதால், பணியாளர்களிடம் மாமூல் தொகை கேட்கும் நிலை உள்ளது. எனவே, பொது விநியோகத் திட்டத்துக்கு தனியாக ஒரு துறையை அமைக்க வேண்டும். நியாய விலைக் கடைகளுக்குச் சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கான மருத்துவப்படியை ரூ. 300} ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை (ஜூலை 9) வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம். 
அரசின் செயலர் உள்ளிட்டோர் முன்னிலையில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, நியாய விலைக் கடை பணியாளர்களின் மாநிலம் தழுவிய கடை அடைப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றார் அவர். இந்தப் பேட்டியின் போது, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜி.ஜெயச்சந்திரராஜா, மாநிலத் துணைத் தலைவர் துரை.சேகர், மாவட்டத் தலைவர் நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.