பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்: மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு வைரமுத்து கண்டனம் 

தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published On :

சென்னை: தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஈஸ்வர் ஜோஷி மற்றும் அவரது உதவியாளர் பிரஹலாத் லோஹர் ஆகிய இருவரும், 14 வயது நிரம்பிய தலித் சிறுவர் இருவரையும் 8 வயது சிறுவன் ஒருவனையும் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து விளையாடியதற்காக கடுமையாக தண்டித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ஜால்கான் மாவட்டத்திலுள்ள வகாதி எனும் கிராமத்தைச் சேர்ந்த இச்சிறுவர்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக நடக்கச் செய்து, இருவரையும் அடித்து துன்புறுத்தியதுடன் அதனை விடியோ எடுத்துள்ளனர். தங்கள் உடலை இலை தழைகளால் மறைத்துக் கொண்டு சிறுவர்கள் கெஞ்சியபடி கதறி அழுத போதும், சிறிதும் இரக்கமின்றி சிறுவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த விடியோ காட்சி வலைத்தளங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

மராட்டியத்தில் கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். குளிக்கவில்லையே என்று தலித்துகளை முன்பு தண்டித்தார்கள். குளிக்கிறார்களே என்று இன்று தண்டிக்கிறார்கள். தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.