திருச்சி: சிறையிலேயே கைதி ஒருவரை அடித்துக் கொல்லும் அளவில்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளது என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சிப் பிரமுகர்களது இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சி சென்றிருந்தார். நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் துரைமுருகன் பற்றிய அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம், திமுகவின் சட்டப்பேரவை செயல்பாடு மீதான மத்திய அமைச்சர் பொன்னாரின் விமர்சனம் மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு ஆகியவை குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஜெயக்குமாரின் தேவையற்ற ஊகங்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
மத்திய அமைச்சர் பொன்னார் இன்று இப்படி சொல்லி இருக்கிறார். நாளை என்ன சொல்வார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
மாநிலத்தின் தலைநகரில் உள்ள சிறையிலேயே கைதி ஒருவரை பிற கைதிகள் அடித்துக் கொல்லும் அளவில்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி ஏடிஎம் காா்டு மோசடி: இளைஞா் கைது

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

ஜம்மு-காஷ்மீா் என்கவுன்ட்டா் விவகாரம்: நீதிபதி விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


