காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சேலம் அரசு மருத்துவமனையில் நடிகர் மன்சூர் அலிகான் அனுமதி

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2018, 12:41 pm IST

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தும்பிப்பாடி மாரியம்மன் கோயில் திடலில் கடந்த மே 3 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். அப்போது பசுமை வழிச் சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராகப் பேசியதாகவும், பொதுமக்களைத் துண்டி விட்டதாகவும் கூறி கடந்த ஜூன் 17 ஆம் தேதி தீவட்டிப்பட்டி போலீஸார், நடிகர் மன்சூர் அலி கான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னை சென்று நடிகர் மன்சூர் அலி கானைக் கைது செய்து, சேலம் அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் சனிக்கிழமை திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறைத் துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மன்சூர் அலிகான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். 

இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மன்சூர் அலிகானுக்கு இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.