சென்னை: காவிரி விவகாரத்திற்காக திமுக எம்.எல் ஏக்கள் ராஜிநாமா செய்யத் தயார் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழன் மாலை 3.30 மணிக்குத் துவங்கியது. இந்த கூட்டத்தில் தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி முன்மொழிந்து பேசினார். அத்துடன் இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படியும் அவை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னர் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
தற்பொழுது நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளோம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட இது நேரம் இல்லை.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் ஒரு பொழுதும் தனது வார்த்தையினை நிறைவேற்றியது இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையுடன் வந்த தமிழகத்து தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்காமல் புறக்கணித்தது ஜனநாயக நெருக்கடி.
ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாதது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த விவகாரத்தில் முதல்வர் தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.
காவிரி விவகாரத்திற்காக திமுக எம்.எல் ஏக்கள் ராஜிநாமா செய்யவும் தயார்.
இந்த தீர்மானத்திற்கு திமுக முழுமையாக ஆதரவு தருகிறது.
இவ்வாறு ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்யோக் பவன் அருகே தீ விபத்து: தொழிலாளா்களின் தற்காலிக குடியிருப்புகள் சேதம்

முதல்வா் விஜய் செய்த சைகை: பேரவைத் தலைவா் விளக்கம்

வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

அரசப் பதவி என்பது சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



