ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

காவிரி விவகாரத்திற்காக திமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்யத் தயார்: ஸ்டாலின் அறிவிப்பு! 

காவிரி விவகாரத்திற்காக திமுக எம்.எல் ஏக்கள் ராஜிநாமா செய்யத் தயார் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2018, 10:30 am

DIN

சென்னை: காவிரி விவகாரத்திற்காக திமுக எம்.எல் ஏக்கள் ராஜிநாமா செய்யத் தயார் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழன் மாலை 3.30 மணிக்குத் துவங்கியது.  இந்த கூட்டத்தில் தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி முன்மொழிந்து பேசினார். அத்துடன் இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படியும் அவை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். 

அதன்பின்னர் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

தற்பொழுது நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளோம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட இது நேரம் இல்லை.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் ஒரு பொழுதும் தனது வார்த்தையினை நிறைவேற்றியது இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையுடன் வந்த தமிழகத்து தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்காமல் புறக்கணித்தது ஜனநாயக நெருக்கடி.

ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாதது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.

இந்த விவகாரத்தில் முதல்வர் தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்த வேண்டும். 

காவிரி விவகாரத்திற்காக திமுக எம்.எல் ஏக்கள் ராஜிநாமா செய்யவும் தயார்.

இந்த தீர்மானத்திற்கு திமுக முழுமையாக ஆதரவு தருகிறது.

இவ்வாறு ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.