விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்! 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை அடைந்திருப்பதாக  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2018, 8:27 pm IST

சென்னை: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை அடைந்திருப்பதாக  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை கூடியது. இதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது மற்றும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வலியுறுத்துவது தொடர்பாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்மானத்தின் நகலுடன் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நீர்வளத்துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

நீங்கள் சென்னை வந்திருந்த பொழுது இது தொடர்பாக நான் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து உருவாக்குவது தொடர்பாக தற்பொழுது  தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்து, ஏற்கனவே நான்கு வாரங்கள் கடந்து விட்டது.

இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.