சென்னை: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை சமயத்தில் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு வார கால அவகாசம் அளித்திருந்தது. அநத அவகாசம் வியாழனுடன் நிறைவடைய உள்ளது. ஆனால் இன்னும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள்
உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது.
மத்திய அரசோ
கிழிந்த வேட்டியையும்
பறிக்கப் பார்க்கிறது.
உழவர்கள் வேட்டி இழந்தால்
நாடு நிர்வாணமாகி விடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


